நன்றி: திரு. ஐயப்பன் மற்றும் திரு.அருள்ராஜ்
Saturday, October 9, 2021
மரம் நடுதல்
பள்ளி வளாகத்தில் பள்ளி கட்டிடத்தின் அருகில் இருந்த புங்கன் மரம் பொறியாளர் ஆலோசனை படி வேறு இடத்தில், மாற்றி நடப்பட்டது.
அறிவியல் கொலு
இப்பள்ளியில் 07-10-2021 அன்று நவராத்திரியை முன்னிட்டு அறிவியல் கொலு வைக்கப்பட்டது.
இக்கொலுவில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மாதிரிகள், தாவர உலகம் மற்றும் விலங்குலகம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.
தாவர உலகத்தின் பெரும் பிரிவுகளான தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோஃபைட்டா, ஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் ஆகியவை குறித்தும், விலங்குலகத்தில் உள்ள முக்கிய பிரிவுகளான முதுகு நாணற்றவை மற்றும் முதுகு நாணுள்ளவை குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக, பட்டதாரி ஆசிரியர்கள் லோகநாதன் மற்றும் முருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் திரு.ஜீவா அறிவியல் கொலுவை பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வக உதவியாளர் திருமதி.கிரிஜா செய்திருந்தார்.
Subscribe to:
Posts (Atom)