தூய்மை நிகழ்வுகள் 2021
சமூக விழிப்புணர்வு தினம்
நாள் : 03-09-2021
இன்று சமூக விழிப்புணர்வு தினத்தையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், கெட்டுஅள்ளி கிராம மக்களிடையே Covid-19 தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. கெட்டுஅள்ளி கிராமத்தின் முக்கிய தெருக்களில், கிராம மக்களுக்கு Covid-19 தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும்
- முகக்கவசம் அணிதல்,
- சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக்கிக் கொள்ளுதல்,
- சமூக இடைவெளி கடைபிடித்தல்
- அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவுதல்
- தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்
உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.
மேலும் கிராமத்தின் முக்கியத் தெருக்களில் உள்ள வீடுகளுக்கே சென்று முகக்கவசம் மற்றும் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நோட்டீஸ் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது.
இன்றைய நிகழ்வில் தலைமை ஆசிரியர் திரு.ஜீவா, பட்டதாரி ஆசிரியர்களான லோகநாதன், முருகன், பிரபாவதி, ஐயப்பன் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு Covid-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.
வீடியோ & புகைப்படத் தொகுப்பு



























