Monday, December 13, 2021

மாணவர் செயல்பாடுகள்

சமூக அறிவியல் பாடத்தில், இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்த சுழல் அட்டைகள்





சரண்யா, 7-ஆம் வகுப்பு




ஷாலினி- ஏழாம் வகுப்பு



வெப்பத்தினால் பொருட்கள் விரிவடைதல்

 

எங்கள் மாணவர்கள் தாங்களாகவே சோதனைகளை  செய்து கற்றுக் கொண்டதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள்


எட்டாம் வகுப்பில் பயிலும் எம்பள்ளியின் இளம் ஆய்வாளர்கள்

கலைச்செல்வன்

ஷபி

இரஞ்ஜித்

செளந்தர்யா

சுவேத்தா

தேவிகா

கிருபா 



இல்லம் தேடிக் கல்வித்திட்டம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று (13-12-2021), கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் - விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கா.ஜீவா தொடங்கி வைத்தார். கலைக் குழுவினர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செய்லபாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தப்பாட்டம், நாடகம், கரகாட்டம் மற்றும் சிறிய அறிவியல் விளையாட்டுக்கள் ஆகியவற்றை நடத்தினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர் திரு.மகாலிங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.சா.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Friday, November 26, 2021

பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்திற்கு தலைவர் மற்றும் நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் 27-11-2021 அன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர், துணைத்தலைவர், பொருளாளர், துணைப் பொருளாளர்  மற்றும் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Tuesday, November 23, 2021

கண்ணொளி காப்போம் திட்டம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (24.11.2021) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ்  கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண்மருத்துவர் திரு.கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு கண் கண்ணாடியை அணியும் முறை, பாதுகாப்பாக பராமரித்தல் மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் இப்பள்ளியில் பயிலும் 21 மாணவ மாணவியருக்கு  கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இறுதியாக பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்வில்  பட்டதாரி ஆசிரியர்கள் ஐயப்பன் அருள்ராஜ், பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Saturday, October 9, 2021

மரம் நடுதல்

பள்ளி வளாகத்தில் பள்ளி கட்டிடத்தின் அருகில் இருந்த புங்கன் மரம் பொறியாளர் ஆலோசனை படி வேறு இடத்தில்,  மாற்றி நடப்பட்டது.
நன்றி: திரு. ஐயப்பன் மற்றும் திரு.அருள்ராஜ்

அறிவியல் கொலு

இப்பள்ளியில் 07-10-2021 அன்று நவராத்திரியை முன்னிட்டு அறிவியல் கொலு வைக்கப்பட்டது.

இக்கொலுவில் தாவரங்கள் மற்றும் விலங்குகளின் மாதிரிகள், தாவர உலகம் மற்றும் விலங்குலகம் என்ற தலைப்பில் வைக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டது.

தாவர உலகத்தின் பெரும் பிரிவுகளான தாலோபைட்டா, பிரையோபைட்டா, டெரிட்டோஃபைட்டா, ஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் ஆகியவை குறித்தும், விலங்குலகத்தில் உள்ள முக்கிய பிரிவுகளான முதுகு நாணற்றவை மற்றும் முதுகு நாணுள்ளவை குறித்தும் மாணவர்களுக்கு விரிவாக, பட்டதாரி ஆசிரியர்கள் லோகநாதன் மற்றும் முருகன் ஆகியோர் விளக்கம் அளித்தனர். தலைமை ஆசிரியர் திரு.ஜீவா அறிவியல் கொலுவை பார்வையிட்டு வாழ்த்துரை வழங்கினார்.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆய்வக உதவியாளர் திருமதி.கிரிஜா செய்திருந்தார்.

Friday, September 3, 2021

சமூக விழிப்புணர்வு தினம்- 03-09-2021

 தூய்மை நிகழ்வுகள் 2021

சமூக விழிப்புணர்வு தினம்

நாள் : 03-09-2021


    இன்று சமூக விழிப்புணர்வு தினத்தையொட்டி கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளி சார்பில், கெட்டுஅள்ளி கிராம மக்களிடையே Covid-19  தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  கெட்டுஅள்ளி கிராமத்தின் முக்கிய தெருக்களில், கிராம மக்களுக்கு  Covid-19  தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்ளும் 
  1. முகக்கவசம் அணிதல்,
  2. சானிடைசர் பயன்படுத்தி கைகளை சுத்தமாக்கிக் கொள்ளுதல்,
  3. சமூக இடைவெளி கடைபிடித்தல்
  4. அடிக்கடி சோப்பினால் கைகளைக் கழுவுதல் 
  5. தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல்  
உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது.

    மேலும் கிராமத்தின் முக்கியத் தெருக்களில் உள்ள வீடுகளுக்கே சென்று  முகக்கவசம் மற்றும் கொரானா பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த நோட்டீஸ் பள்ளியின் சார்பாக வழங்கப்பட்டது. 

    இன்றைய நிகழ்வில் தலைமை ஆசிரியர் திரு.ஜீவா, பட்டதாரி ஆசிரியர்களான லோகநாதன், முருகன், பிரபாவதி, ஐயப்பன் மற்றும் அருள்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு,  பொதுமக்களுக்கு Covid-19 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

வீடியோ & புகைப்படத் தொகுப்பு