Showing posts with label கனித மன்றம். Show all posts
Showing posts with label கனித மன்றம். Show all posts

Tuesday, August 28, 2018

கணித மன்ற தொடக்க விழா

     அரசு உயர்நிலைப்பள்ளி கெட்டுஅள்ளியில் 28-8-2018 அன்று கணித மன்ற தொடக்க விழா நடைபெற்றது இவ்விழாவினை பள்ளி தலைமையாசிரியர் திரு நாம் முருகேசன் அவர்கள் விழா தலைமையேற்று கணிதத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் காலத்தின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். 

     வரவேற்புரை திரு புஷ்பாகரன் பட்டதாரி ஆசிரியர் நன்முறையில்  வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை திரு முருகன் பட்டதாரி ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களிடையே கணிதத்தின் சிறு சிறு வினாக்கள் கேட்டும்,சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஊக்குவித்தார். 

    பட்டதாரி ஆசிரியர்கள் திரு.லோகநாதன், திரு.அருள்ராஜ், திருமதி செல்வி ஆகியோர் வாழ்க்கையோடு ஒன்றியதே கணிதம் என்பதை பல வகைகளில் எடுத்துரைத்தார். 

  மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ஐயப்பன் மற்றும் திருமதி பிரபாவதி ஆகியோர் கணித மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை ,மாணவர்களை தயார் செய்தல், விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கமைப்பு செய்திருந்தனர். 

நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியை திருமதி மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்.