Sunday, December 2, 2018

சமூக அறிவியல்

ஏழாம் வகுப்பு 

சமூக அறிவியல் -இரண்டாம் பருவம்

வளரறி மதிப்பீடு (ஆ)- வினாத்தாள்








ஆக்கம்:

ப.லோகநாதன்.,
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர்நிலைப் பள்ளி
கெட்டுஅள்ளி
தருமபுரி மாவட்டம்







Click here to download

Sunday, September 16, 2018

முதல் பருவம்- ஓவியம் வினாத்தாள்

முதல் பருவம்-ஓவியம் வினாத்தாள்- ஆறாம் வகுப்பு


முதல் பருவம்-ஓவியம் வினாத்தாள்- ஏழாம் வகுப்பு


முதல் பருவம்-ஓவியம் வினாத்தாள்- எட்டாம் வகுப்பு

TRUST EXAM-Model Exam- Dharmapuri Dist



அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம், தருமபுரி மாவட்டத்தின் சார்பில் தமிழ்நாடு ஊரகத் திறனாய்வு எழுதும் மாணவர்களுக்கு 16.09.2018 அன்று நடத்தப்பட்ட முன் மாதிரித்தேர்வு வினாத்தாள்

Click Here to downlaod

Friday, September 14, 2018

முதல் பருவம்-CCE-கண்காட்சி

அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளியில் 06.09.2018 அன்று முதல் பருவ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கண்காட்சி நடைபற்றது.
கன்காட்சியில் மாணவர்கள் முதல் பருவம் முழுவதும் செய்த செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நத்தத அள்ளி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முசோலினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன் செய்திருந்தார்


























தமிழ் இலக்கிய மன்றம்-தொடக்க விழா

           அரசு உயர்நிலைப்பள்ளி, கெட்டுஅள்ளியில் 31.08.2018 அன்று தமிழ் இலக்கிய மன்ற தொடக்க விழா நடைபெற்றது. இவ்விழாவினை பள்ளி தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் அவர்கள் விழா தலைமையேற்று தமிழ்மொழியின் சிறப்புகள் பற்றி எடுத்துக்கூறி சிறப்புரையாற்றினார்.
             வரவேற்புரை திருமதி ந.செல்வி (பட்டதாரி ஆசிரியர்)நன்முறையில் வரவேற்புரை நிகழ்த்தினார்.இந்நிகழ்ச்சியினை திரு.சா.முருகன்(பட்டதாரி ஆசிரியர்) சிறப்பாக தொகுத்து வழங்கினார்.       
              பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ப.லோகநாதன்,திரு.ம.ஐயப்பன்,திருமதி.செ.பிரபாவதி மற்றும் திரு.அ.அருள்ராஜ், திரு.மு.புஷ்பாகரன்ஆகியோர் தமிழுக்கு தொண்டாற்றிய கவிஞர்கள்  பற்றியும் அவர்களின் கவிதைகளையும் சிறப்பாக எடுத்துக் கூறினார்கள்.     
               தமிழ் இலக்கிய மன்றம் சார்பில் பரதநாட்டியம்,கரகாட்டம்,சிலம்பாட்டம்,நாடகம் ஆகிய கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 
               நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியர் திருமதி.மா.மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்



















Wednesday, August 29, 2018

வந்தே மாதரம் பாடல்



ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் பிரிவில் நமது நாடு என்ற பாடத்தில் தேசிய சின்னங்களை அறிமுகப்படுத்தும் போது தேசியபாடலான  வந்தேமாதரம் பாடலை பயிற்சி செய்யும் எம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள்.



Tuesday, August 28, 2018

கணித மன்ற தொடக்க விழா

     அரசு உயர்நிலைப்பள்ளி கெட்டுஅள்ளியில் 28-8-2018 அன்று கணித மன்ற தொடக்க விழா நடைபெற்றது இவ்விழாவினை பள்ளி தலைமையாசிரியர் திரு நாம் முருகேசன் அவர்கள் விழா தலைமையேற்று கணிதத்தின் முக்கியத்துவம் வாழ்க்கையின் முன்னேற்றத்தில் காலத்தின் பங்கு பற்றி சிறப்புரை ஆற்றினார்கள். 

     வரவேற்புரை திரு புஷ்பாகரன் பட்டதாரி ஆசிரியர் நன்முறையில்  வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியினை திரு முருகன் பட்டதாரி ஆசிரியர் சிறப்பாக தொகுத்து வழங்கியதோடு மட்டுமல்லாமல் மாணவர்களிடையே கணிதத்தின் சிறு சிறு வினாக்கள் கேட்டும்,சரியான பதில் கூறிய மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் ஊக்குவித்தார். 

    பட்டதாரி ஆசிரியர்கள் திரு.லோகநாதன், திரு.அருள்ராஜ், திருமதி செல்வி ஆகியோர் வாழ்க்கையோடு ஒன்றியதே கணிதம் என்பதை பல வகைகளில் எடுத்துரைத்தார். 

  மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் திரு.ஐயப்பன் மற்றும் திருமதி பிரபாவதி ஆகியோர் கணித மன்றத்திற்கான உறுப்பினர் சேர்க்கை ,மாணவர்களை தயார் செய்தல், விழாவுக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் ஒருங்கமைப்பு செய்திருந்தனர். 

நிகழ்ச்சியின் முடிவில் பட்டதாரி ஆசிரியை திருமதி மீனாட்சி அனைவருக்கும் நன்றி கூறினார்.