Showing posts with label சுற்றுச்சூழல் மன்றம். Show all posts
Showing posts with label சுற்றுச்சூழல் மன்றம். Show all posts

Tuesday, July 29, 2025

இயற்கை பாதுகாப்பு தினம் மற்றும் புலிகள் பாதுகாப்பு தினம்

பள்ளியின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் இயற்கை பாதுகாப்பு தினம் (ஜூலை 28) புலிகள் பாதுகாப்பு தினத்தை ஒட்டி(ஜூலை 29) பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 
சோலைக் காடுகளை காப்போம் புலிகளைக் காப்போம் ஆகிய ஆவணத் திரைப்படங்கள் திரையிடப்பட்டன. 
காடுகளின் முக்கியத்துவம், காடுகள் எவ்வாறு  மழை நீரை சேமிக்கின்றன, மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளால் பல்லுயிரினத்தன்மை எவ்வாறு பேணிக் காக்கப்படுகின்றன, காடழிப்பினால் காட்டுயிர் மனித மோதல் எவ்வாறு உருவாகிறது? புலிகள் மற்றும் வன உயிரின பாதுகாப்புச் சட்டங்கள் என்னென்ன புலிகளை பாதுகாக்க காடுகளை பாதுகாக்க மாணவர்கள் என்னென்ன செய்ய வேண்டும் என்பதைக் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.


மற்றொரு நிகழ்ச்சியாக பள்ளி மாணவர்களுக்கு புலிகளை பாதுகாப்போம் என்ற தலைப்பில் ஓவிய போட்டி நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் ஒன்பதாம் வகுப்பில் இருந்து ஜெய்ஹிந்த், மௌனிஷ், தாமரைச்செல்வன் என்ற மூவரும் ஆறாம் வகுப்பில் இருந்து வேணி ஸ்ரீ , கேசவர்த்தினி, மாலினி ஆகிய மாணவிகளும் சிறப்பிடம் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார்.