Showing posts with label விழாக்கள். Show all posts
Showing posts with label விழாக்கள். Show all posts

Friday, July 19, 2019

நீர் வள மேலாண்மை, பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

கெட்டுஅள்ளி உயர்நிலைப் பள்ளியில் 16.07.2019 அன்று மழைநீர் சேகரிப்பு, நீர்வள மேலாண்மை மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் பேரணி  நடைபெற்றது..


கருத்தரங்கிற்கு பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் அவர்கள் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் நீர் வள மேலாண்மை, மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் பெருமக்கள் தொடங்கி வைத்தனர்.



இந்து தமிழ் நாளிதழில் -19.07.2019


நிகழ்ச்சியில் மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

 கருத்தரங்கு மற்றும் பேரணிக்கான ஏற்பாடுகளை பள்ளி அளவில்  சுற்றுச்சூழல் மன்றம்  மற்றும் இளையோர் செஞ்சிலுவைச் சங்க ஒருங்கிணைப்பாளர்கள் செய்திருந்தனர்.

பறவை பார்த்தல் -தமிழகப் பறவைகள்- குறுங்கையேடு வழங்கும் விழா

           கடந்த ஜனவரி மாதம், பறவை பார்த்தல் அறிமுக வகுப்பு மற்றும் நேரடி பயிற்சி வகுப்பு ஆகியவை பறவை ஆர்வலர்கள் திரு.செழியன் மற்றும் திரு.மாசிலாமணி செல்வம்  ஆகியோர் சென்னையில் இருந்து  நேரடியாக பள்ளிக்கே வந்திருந்து பயிற்சியளித்தனர். மேலும் தமிழகப் பறவைகள் குறித்த புகைப்படக் கண்காட்சியும் நடத்தப்பட்டது.

                        அதனைத் தொடர்ந்து 04.07.2019 அன்று நடைபெற்ற சுற்றுச் சூழல் தினவிழாவில்  138 தமிழகப் பறவைகள் அடங்கிய குறுங்கையேடு மாணவர்களுக்கு வழங்கப் பட்டது.






அறிவினை விரிவு செய்-04.07.2019


     எம்பள்ளி  அறிவியல் மன்றத்தின் சார்பில் 
“அறிவினை விரிவு செய்” என்ற நிகழ்ச்சி  04.07.2019 அன்று நடைபெற்றது.

   நிகழ்ச்சிக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாவட்ட செயலாளர் திரு.சுஷில்குமார் மற்றும் துணைத்தலைவர் திருமதி.ரேணுகாதேவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.






     03.07.2019 அன்று நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன்னதாக மாணவ மாணவியர்களிடம், அவர்களின், பாடம் சார்ந்த, பாடத்தொடர்பற்ற சந்தேகங்கள், கேட்க நினைத்து தயங்கிய வினாக்கள் ஆகியவற்றை ஒரு தாளில் எழுதி, அதற்கென பள்ளியின் அறிவிப்பு பலகை அருகில் வைக்கப்பட்டுள்ள வினாப்பெட்டியில் சேர்க்கும் படி அறிவிக்கப்பட்டது.
     மாணவர்களின் வினாக்களுக்கு 04.07.2019 அன்று நடைபெறும் ”அறிவினை விரிவு செய்” நிகழ்ச்சியில் விளக்கம் அளிக்கப்படும் என்றும், விளக்கம் அளிக்க இயலாத வினாக்களுக்கு, துறை சார் நிபுணர்களைக் நேரடியாக பள்ளிக்கு அழைத்து வந்து  விளக்கம் அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப் பட்டிருந்தது.

  திரு.சுஷில் குமார் அவர்கள், மாணவர்களின் ஓவ்வொரு வினாவுக்கும், புரியும் படியும், தெளிவாகவும் விளக்கம் அளித்தார். மேலும் தொடர்ந்து  அவருடன்  மாணவர்கள்  ஆர்வத்துடன் கேள்விகளை கேட்டும்,    கருத்தாளருடன் உரையாடியும் நிகழ்ச்சியை ஒரு அறிவு வேட்டைக்கான களமாக்கிக் கொண்டனர்.
           
        வகுப்பறை நிகழ்வுகளில் ஈடுபாடில்லாதவர்கள் கூட இந்நிகழ்வில் அதீத ஈடுபாட்டுடன்  கருத்தாளருடன் உரையாடியது, அவர்களது கற்றல் திறன்களை மேலும் வளர்த்துக் கொள்ளும் வாய்ப்பாக அமைந்தது.
  
              








Saturday, March 16, 2019

தேசிய அறிவியல் தினம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா-28.02.2019

நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, கெட்டுஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் தினத்தின் நோக்கம், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து ஆசிரியர் முருகன், அருள்ராஜ் ஆகியோர் பேசினர். 
இதையடுத்து மாணவர்களுக்கு அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
புகைப்படத் தொகுப்பு




















காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி


பறவை பார்த்தல்

பறவை பார்த்தல் நிகழ்ச்சி குறித்த் திரு.செழியன் அவர்களின் பதிவு



பதிவை வாசிக்க


காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி

Friday, February 15, 2019

பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம்

இன்று 15.02.2019 தருமபுரி மாவட்டம், கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில்  சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில் பறவை பார்த்தல்-கண்காட்சி மற்றும் அறிமுகக் கருத்தரங்கம் நடைபெற்றது.

இக்கண்காட்சியை பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தொடங்கி வைத்தார். சுமார் 100க்கும் அதிகமான தமிழ்நாட்டு பறவைகளின் புகைப்படங்கள் காட்சிப் படுத்தப்பட்டிதிருந்தது.

பறவைபார்த்தல் -அறிமுக கருத்தரங்கில் பறவை ஆர்வலர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளர் திரு.செழியன்.ஜா மற்றும்
பறவை ஆர்வலர்,சத்தியபாமா நிகர்நிலைப் பல்கலைக்கழக பேராசிரியர் முனைவர்.மாசிலாமணி செல்வம் ஆகியோர் கருத்தாளர்களாக கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் பறவைகளை பார்த்தல், பறவைகளை அடையாளம் காணல், அதனை இணையதளத்தில் பதிவு செய்தல் குறித்து விவரித்ததோடு, மாணவர்களை  பள்ளியைச் சுற்றி அமைந்துள்ள பகுதிகளுக்கு அழைத்துச்சென்று சுமார் நீலவால் பஞ்சுருட்டான், புதர்ச்சிட்டு, வல்லூறு, பனை உழவாரன், குண்டுகரிச்சான், பனங்காடை உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பறவையினங்களை அடையாளம் காட்டி பறவை பார்த்தல் குறித்த நுட்பங்களை விளக்கினார்கள்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளியின் சுற்றுச்சூழல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் ப.லோகநாதன் மற்றும் இருபால் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ மாணவியர் அனைவருக்கும் தமிழகப் பறவைகள் குறித்த கையேடு
















வழங்கப்பட்டது.