கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் தேசிய அறிவியல் தின விழா-28.02.2019
நல்லம்பள்ளி: நல்லம்பள்ளி அருகே, கெட்டுஹள்ளி அரசு உயர்நிலைப்பள்ளியில் அறிவியல் மன்றம் சார்பில் தேசிய அறிவியல் தின விழா நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். அறிவியல் தினத்தின் நோக்கம், அறிவியல் வளர்ச்சிகள் குறித்து ஆசிரியர் முருகன், அருள்ராஜ் ஆகியோர் பேசினர்.
இதையடுத்து மாணவர்களுக்கு அறிவியல் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டன. அதில், வெற்றி பெற்றவர்களுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார். ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.
புகைப்படத் தொகுப்பு
காலைக்கதிர் பத்திரிக்கை செய்தி



















No comments:
Post a Comment