Showing posts with label வகுப்பறை செயல்பாடுகள். Show all posts
Showing posts with label வகுப்பறை செயல்பாடுகள். Show all posts

Monday, December 13, 2021

மாணவர் செயல்பாடுகள்

சமூக அறிவியல் பாடத்தில், இந்திய மாநிலங்கள் மற்றும் தலைநகரங்கள் ஆகியவற்றை அறிந்துகொள்ள எங்கள் பள்ளியின் ஏழாம் வகுப்பு மாணவர்கள் செய்த சுழல் அட்டைகள்





சரண்யா, 7-ஆம் வகுப்பு




ஷாலினி- ஏழாம் வகுப்பு



Friday, July 19, 2019

விசையும் இயக்கமும்

எட்டாம் வகுப்பு - அறிவியல் 
வகுப்பறை செயல்பாடுகள்




பங்கேற்பு-கற்றலையும் கற்பித்தலையும் எளிதாக்குகிறது









CCE-அறிவியல் செயல்பாடுகள்

எட்டாம் வகுப்பு - அறிவியல்
 நுண்ணுயிரிகள் பாடத்திற்கான செயல்பாடுகள்
27.06.2019 மற்றும் 28.06.2019

முன் தயாரிப்பு:
வைரஸ்,பாக்டீரியா, பூஞ்சை, ஆல்கா புரோட்டோசோவா
=>மேற்கண்ட தலைப்புகளில் தலைப்பு அட்டைகளை எழுதிக்கொள்ள வேண்டும்.
=> ஒவ்வொரு தலைப்புக்கும் ஏற்றவாறு அவற்றின் 
1.செல் வகை (புரோகேரியாட், யூ கேரியாடிக்),
2.வகைகள், 
3.அவற்றைப் பற்றி படிக்கும் பாடப்பிரிவு, பண்புகள்
4.நுண்ணுயிரிகளால் ஏற்படும் நன்மைகள்
5.நுண்ணுயிரிகளால் ஏற்படும் தீமைகள் 6.மனிதர்களுக்கு ஏற்படும் நோய்கள் 7.விலங்குகளுக்கு ஏற்படும் நோய்கள் ஆகியவை அடங்கிய சிறு சிறு அடைகளாக எழுதிக்கொள்ள வேண்டும்.

செயல்பாடு:
1.மேற்குறிப்பிட்ட வைரஸ் பாக்டீரியா பூஞ்சை ஆல்கா புரோட்டோசோவா என்ற தலைப்பு அட்டைகளை மேசை மீதோ அல்லது தரையிலோ தனித்தனியாக வைத்து விட வேண்டும்.
2. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 5 முதல் 10 அட்டை வீதம் கொடுக்கலாம்.
3. அந்த சிறு குறிப்புகள் உள்ள அட்டைகளை உரிய தலைப்பு அட்டையுடன் சரியாக பொருத்த வேண்டும்.
4. மாணவர்கள் சரியாக பொருத்திய அட்டைகளுக்கு மதிப்பெண் வழங்கலாம்.
5. கூடுதலான வாய்ப்புகளை வழங்கும் பொழுது மீத்திறன் மாணவர்களை அனைத்து அட்டைகளையும் பொருத்த செய்யலாம்.
6. மெல்ல கற்கும் மாணவர்கள் கூடுதலான வாய்ப்புகளைப் பெறும் பொழுது அவர்கள் முன்னர் செய்த தவறை திருத்திக் கொள்ள ஏதுவாகிறது.
குறிப்பு:
இச்செயற்பாட்டை மீத்திறன் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்களை இணைத்து குழுச்செயல்பாடாகவும் செய்யலாம்.
🙏🙏✍️
ப. லோகநாதன்
பட்டதாரி ஆசிரியர்,
அரசு உயர் நிலைப்பள்ளி,
கெட்டு அள்ளி
தர்மபுரி மாவட்டம்.










Friday, September 14, 2018

முதல் பருவம்-CCE-கண்காட்சி

அரசு உயர்நிலைப் பள்ளி கெட்டுஅள்ளியில் 06.09.2018 அன்று முதல் பருவ தொடர் மற்றும் முழுமையான மதிப்பீடு கண்காட்சி நடைபற்றது.
கன்காட்சியில் மாணவர்கள் முதல் பருவம் முழுவதும் செய்த செயல்பாடுகள் கண்காட்சியாக வைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு நத்தத அள்ளி பள்ளித் தலைமை ஆசிரியர் திரு.முசோலினி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை திறந்து வைத்தார்.பள்ளித்தலைமை ஆசிரியர் திரு.நா.முருகேசன் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பட்டதாரி ஆசிரியர் திரு.ப.லோகநாதன் செய்திருந்தார்


























Wednesday, August 29, 2018

வந்தே மாதரம் பாடல்



ஏழாம் வகுப்பு சமூக அறிவியல், குடிமையியல் பிரிவில் நமது நாடு என்ற பாடத்தில் தேசிய சின்னங்களை அறிமுகப்படுத்தும் போது தேசியபாடலான  வந்தேமாதரம் பாடலை பயிற்சி செய்யும் எம் பள்ளி ஏழாம் வகுப்பு மாணவர்கள்.