Monday, December 13, 2021

இல்லம் தேடிக் கல்வித்திட்டம் - விழிப்புணர்வு நிகழ்ச்சி

இன்று (13-12-2021), கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இல்லம் தேடி கல்வித்திட்டம் - விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியை பள்ளித் தலைமை ஆசிரியர் திரு. கா.ஜீவா தொடங்கி வைத்தார். கலைக் குழுவினர் திட்டத்தின் நோக்கம் மற்றும் செய்லபாடுகள் குறித்து விளக்கம் அளிக்கும் வகையில் தப்பாட்டம், நாடகம், கரகாட்டம் மற்றும் சிறிய அறிவியல் விளையாட்டுக்கள் ஆகியவற்றை நடத்தினார்கள்.
ஆசிரியர் பயிற்றுநர் திரு.மகாலிங்கம் மற்றும் பட்டதாரி ஆசிரியர் திரு.சா.முருகன் ஆகியோர் நன்றி கூறினர்.

நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியர், இருபால் ஆசிரியர்கள், பயிற்சி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment