Tuesday, November 23, 2021

கண்ணொளி காப்போம் திட்டம்

கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் இன்று (24.11.2021) மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ்  கண் கண்ணாடிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கண்மருத்துவர் திரு.கணேஷ் அவர்கள் கலந்து கொண்டு கண் கண்ணாடியை அணியும் முறை, பாதுகாப்பாக பராமரித்தல் மற்றும் கண் பாதுகாப்பு குறித்து விளக்கம் அளித்தார். பின்னர் இப்பள்ளியில் பயிலும் 21 மாணவ மாணவியருக்கு  கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது. இறுதியாக பட்டதாரி ஆசிரியர் லோகநாதன் நன்றி கூறினார். இந்நிகழ்வில்  பட்டதாரி ஆசிரியர்கள் ஐயப்பன் அருள்ராஜ், பிரபாவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment