இந்திய தர நிர்ணய அமைவனத்தின் சார்பில்
கெட்டுஅள்ளி பள்ளியில் விளம்பர பதாகை தயாரிப்பு போட்டி
நல்லம்பள்ளி ஒன்றியம் கெட்டுஅள்ளி அரசு உயர்நிலைப் பள்ளியில் செயல்பட்டு வரும் தரநிர்ணய மன்றத்தின் மூலம் ( Standard Club) மாணவர்களுக்கு 04-07-2025 அன்று விளம்பர பதாகை தயாரிப்புப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியை இந்திய தர நிர்ணய அமைவன கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் அலுவலர் சரவணகுமார் தொடங்கி வைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியர் சுகந்தி தலைமை தாங்கினார்.
பொதுமக்கள் அன்றாட வாழ்வில் பயன்படுத்தும் சமையல் அடுப்பு, குக்கர், மின்விசிறி, தலைக்கவசம், உலர் மின்கலன்கள், எரிவாயு உருளை, மிதிவண்டி, பால்பாயிண்ட் பேனா உள்ளிட்ட பொருட்களுக்கான ஐ.எஸ்.ஐ தரம், தங்க நகைகளுக்கு வழங்கப்படும் HUID, மின்னணுப் பொருட்களுக்கு வழங்கப்படும் R- எண் குறித்த விழிப்புணர்வு பள்ளிப்பருவத்திலேயே ஏற்படும் போது அவர்கள் வருங்காலத்தில் சிறந்த நுகர்வோராகவும், தொடர்புடைய பல்வெறு துறை சார்ந்த படிப்புகளை படிக்க ஆர்வமூட்டும் விதமாகவும் இப்போட்டியானது வடிவமைக்கப்பட்டிருந்தது.
இப்போட்டிக்கான ஏற்பாடுகளை, நொய்டாவில் உள்ள தேசிய தரநிர்ணய பயிற்சி மையத்தில் (NITS, Noida) பயிற்சி பெற்ற இப்பள்ளியின் ஆசிரியர் லோகநாதன் செய்திருந்தார். போட்டியின் வெற்றியாளார்களை பள்ளியின் இருபால் ஆசிரியர்கள் தெரிவு செய்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இந்திய தர நிர்ணய அமைவனத்தின் கோயம்புத்தூர் கிளை அலுவலகத்தின் மூலம் பரிசுகள் வழங்கப்படுகிறது.































No comments:
Post a Comment